செய்திகள்
வங்கி ஏ.டி.எம். பணம் ரூ.3 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
மதுராந்தகம்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls