செய்திகள்
4 தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு- அதிமுகவுடன் நாளை உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்த கூட்டணி ஒப்பந்தம் நாளை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #DMDK #ADMK
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.-தி.மு.க. தலைமையில் 2 அணிகள் உருவாகி கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தது. அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. தலைமையில் உருவான அணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முயற்சி செய்தன. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இரு கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் விஜயகாந்த் பிடிவாதமாக இருந்தார். இதனால் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.
இதற்கிடையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்தது. இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாது என்ற நிலை ஏற்பட்டது.
தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு முடிவடைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க.வால் கூட்டணியை இறுதி செய்ய முடியாததால் இழுபறி நீடித்தது. கூட்டணியை உறுதி செய்து பிரதமர் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்தை நிறுத்த அ.தி.மு.க. முயற்சி செய்தது.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை. முதலில் 3 தொகுதி தருவதாகவும் பின்னர் 4 தொகுதி ஒதுக்குவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 5 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தியதால் நேற்று கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது.
இதற்கிடையே அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று தி.மு.க.வுடனும் கூட்டணி பற்றி பேச நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைமை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு கட்சி நிர்வாகிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. தரப்பில் 4 தொகுதிகள் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மேல்சபை உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனை தேமுதிக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதும் கூட்டணி உடன்பாடு நாளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. 4 தொகுதியும், ஒரு மேல்சபையும் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாளை நல்ல நாளாக இருப்பதால் உடன்பாடு கையெழுத்தாகும்’ என்றார். #LSPolls #DMDK #ADMK
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.-தி.மு.க. தலைமையில் 2 அணிகள் உருவாகி கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தது. அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. தலைமையில் உருவான அணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முயற்சி செய்தன. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இரு கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் விஜயகாந்த் பிடிவாதமாக இருந்தார். இதனால் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.
இதற்கிடையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்தது. இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாது என்ற நிலை ஏற்பட்டது.
தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு முடிவடைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க.வால் கூட்டணியை இறுதி செய்ய முடியாததால் இழுபறி நீடித்தது. கூட்டணியை உறுதி செய்து பிரதமர் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்தை நிறுத்த அ.தி.மு.க. முயற்சி செய்தது.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை. முதலில் 3 தொகுதி தருவதாகவும் பின்னர் 4 தொகுதி ஒதுக்குவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 5 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தியதால் நேற்று கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது.
இதற்கிடையே அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று தி.மு.க.வுடனும் கூட்டணி பற்றி பேச நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைமை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை. இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இனி கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு கட்சி நிர்வாகிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. தரப்பில் 4 தொகுதிகள் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மேல்சபை உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனை தேமுதிக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதும் கூட்டணி உடன்பாடு நாளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. 4 தொகுதியும், ஒரு மேல்சபையும் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாளை நல்ல நாளாக இருப்பதால் உடன்பாடு கையெழுத்தாகும்’ என்றார். #LSPolls #DMDK #ADMK