உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2022-08-27 08:53 GMT   |   Update On 2022-08-27 08:53 GMT
  • தூத்துக்குடி ராஜபாண்டி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது.
  • சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது.

ஆத்தூர்:

தூத்துக்குடி ராஜபாண்டி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது.

குமார் பழையகாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News