அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
- காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
- அதிகாலையில் சம்பவம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் அசிம் (வயது20) இவர்கள் கால்நடைகளை வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அசிம் தனது மோட்டர் சைக்கிளில் காரிமங்கலத்தில் நடைபெறும் வர சந்தைக்கு கால்நடைகளை வாங்க வந்துள்ளார்.
அப்போது மொரப்பூர் சாலையில் உள்ள செல்லம்பட்டி பகுதிக்கு அசிம் மோட்டர் சைக்கிளில் வந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.