உள்ளூர் செய்திகள்

கால்பந்து போட்டியில் கோல் அடிக்க முயலும் வீரர்கள்.

இளைஞர் கால்பந்து போட்டி தொடக்கம்

Published On 2023-10-11 09:54 GMT   |   Update On 2023-10-11 09:54 GMT
  • இறுதிப்போட்டி வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறுகிறது.
  • வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

அகில இந்திய கால்பந்து கழகம் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு கால்பந்து கழக வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் சார்பில் இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடை யேயான 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர் கால்பந்து போட்டி தொடங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்த கால்பந்து போட்டி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த முதல் போட்டியில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும், கரூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும் மோதின.

இந்த போட்டியை தஞ்சை மாவட்ட விளையா ட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

மாவட்ட உடற்கல்வி அலுவலர் கற்பகம், தமிழக கால்பந்து கழகத் துணைத் தலைவரும் தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கம் தலைவருமான சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்பந்து போட்டியில் நடுவர்களாக 12 பேர் பணியாற்றுகின்றனர். இறுதிப்போட்டி வருகிற 15ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் கண்கா ணித்து அதிலிருந்து சுமார் 40 வீரர்களை தேர்வு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அதிலிருந்து 22 பேர் தேர்வு செய்யப்படுவர்.

அவர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெ டுக்கப்படுவர்.

அதனை தொடர்ந்து தேசிய அளவிலான மாநில ங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர்.

Tags:    

Similar News