உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2023-06-09 09:30 GMT   |   Update On 2023-06-09 09:30 GMT
  • போலீசார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
  • விசாரணையில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

நெல்லை:

வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News