உள்ளூர் செய்திகள்

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை அழைத்து சென்ற வாலிபர்- போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-08-25 11:57 IST   |   Update On 2022-08-25 11:57:00 IST
  • தமிழ்வாணன் 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருக்கமாக பழகினார்.
  • தமிழ்வாணன் காதல் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிந்தது.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த விச்சூரை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருக்கமாக பழகினார். இதனால் மாணவியின் பெற்றோர் வீட்டை காலி செய்துவிட்டு ஆண்டார் குப்பத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் தமிழ்வாணன் காதல் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை கைது செய்து மாணவியை மீட்டனர்.

Tags:    

Similar News