உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2023-06-07 10:03 GMT   |   Update On 2023-06-07 10:03 GMT
  • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
  • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், எஸ்.பி. பரிந்துரை.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20).

இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

இதனையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News