உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 24).
சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சூர்யாவை பிடித்து போலீசார் கைது செய்தனர்.