உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2022-12-02 10:01 GMT   |   Update On 2022-12-02 10:01 GMT
  • சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியில் தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
  • அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சேலம்:

சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 24). இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். இன்று அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் எதிரில்

உள்ள சுடுகாடு அருகே ஒரு

வாலிபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு

சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு பணியில் இருந்த பள்ளப்பட்டி போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் இளவரசன் மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் (24) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News