உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனியில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-07-15 12:25 IST   |   Update On 2023-07-15 12:25:00 IST
  • டிப்ளமோ படித்து முடித்த தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.
  • இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி:

தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன்(27). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரதி(21) என்பவருடன் திருமணம் நடந்தது. டிப்ளமோ படித்து முடித்த மணிகண்டன் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.

இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைதொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மீண்டும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News