உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சின்னமனூர் அருகே குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-09-01 06:34 GMT   |   Update On 2023-09-01 06:34 GMT
  • குழந்தையுடன் வெளியே சென்ற பெண் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
  • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்த மோகன்பாபு மனைவி மைப்பாரை (வயது26). இவர்களுக்கு வர்ஷா (8) என்ற மகளும் லோகேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று குழந்தைகளுடன் மைப்பாரை வெளியே சென்றார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News