உள்ளூர் செய்திகள்

கூவத்தூர் அருகே கை, கால்களை கட்டி இளம்பெண் கொலை- போலீசார் விசாரணை

Published On 2023-01-13 15:07 IST   |   Update On 2023-01-13 15:07:00 IST

மாமல்லபுரம்:

கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பாலாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

மர்ம நபர்கள் அவரை கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்து உள்ளனர். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். மர்ம கும்பல் அவரை வேறு இடத்தில் கொலை செய்து பாலாற்றில் வீசி இருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இளம்பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

கொலையுண்ட பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

இளம்பெண் கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News