உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-29 06:52 GMT   |   Update On 2023-08-29 06:52 GMT
  • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், நிர்மலா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரி வித்த னர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

Tags:    

Similar News