உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் சாவு

Published On 2023-11-07 15:49 IST   |   Update On 2023-11-07 15:49:00 IST
  • கல்லூரி முடித்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார்.
  • அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 . தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருகாலம் பட்டி சார்ந்தவர் சரவணன், இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 24). இவர் கல்லூரி முடித்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டின் பின்புறம் சென்றார். நீண்ட நேரமாகி யும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஜெயபப்பிரதா கிணற்றில் குதித்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பாப்பி–ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், தீய ணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த ஜெயபிரதாவின் உடலை பிணமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, கிணற்றில் விழுந்து இறந்த ஜெயப்பிரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Similar News