உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
- அடிக்கடி வீட்டில் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மனவிரக்தி அடைந்த தீபநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அருகே உள்ள பாரூர் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவரது தீபநாயகி (வயது29). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனவிரக்தி அடைந்த தீபநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு 3 வயது மகள், 6 வயது மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.