உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் "திடீர்" தற்கொலை: 6 வயது பெண் குழந்தை தவிப்பு

Published On 2023-08-25 10:25 GMT   |   Update On 2023-08-25 10:25 GMT
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
  • காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார்.

வண்டலூர்:

வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் புருஷோத்தன். இவரது மனைவி பவித்ரா (வயது 25).இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4 மாதத்துக்கு முன்பு பவித்ரா தனது மகளுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பவித்ரா ஏற்கனவே கல்லூரியில் படித்தபோது உடன் படித்த வாலிபருடன் நெருங்கி பழகி வந்ததும் அவருடன் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.

கூடுவாஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பவித்ரா தங்கி இருந்தார். இதற்கிடையே பவித்ரா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 6 வயது பெண் குழந்தை தவிப்பில் உள்ளது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலன் பிரிந்து சென்று விட்டார். பின்னர் பவித்ரா பெற்றோரை சந்தித்து பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த பவித்ரா தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News