கூடுவாஞ்சேரியில் கொள்ளையடித்த நகையை அடகு வைக்க வந்தபோது சிக்கிய வாலிபர்
- பகலில் கொத்தனார் வேலைக்கு சென்றுவரும் அவர் கொள்ளையடித்த நகை, பணத்தில் நண்பர்களிடம் ஜாலியாக சுற்றி செலவு செய்து வந்தார்.
- தற்போது செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்த நகைகளை அடகு வைக்க வந்தபோது சூர்யா போலீசாரிடம் சிக்கி இருப்பது விசாரணையில் தெரிந்தது.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி பஸ்நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்த சூர்யா (22) என்பதும் கூடுவாஞ்சேரி பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
பகலில் கொத்தனார் வேலைக்கு சென்றுவரும் அவர் கொள்ளையடித்த நகை, பணத்தில் நண்பர்களிடம் ஜாலியாக சுற்றி செலவு செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சி நகர், செல்லப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில் நகை-பணத்தை திருடி நண்பர்களுக்கு மது விருந்து வைத்து உள்ளார்.
தற்போது செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்த நகைகளை அடகு வைக்க வந்தபோது சூர்யா போலீசாரிடம் சிக்கி இருப்பது விசாரணையில் தெரிந்தது.
அவர் வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளையடித்து உள்ளார்? கூட்டாளிகள் யார்? யார்? என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.