உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேடசந்தூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2022-09-05 05:32 GMT   |   Update On 2022-09-05 05:32 GMT
  • நூல்பண்டல்கள் ஏற்றிச்சென்ற வாகனம் பைக் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
  • இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி கோணப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்பாண்டி(21). இவர் தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காக்காதோப்பு பிரிவில் வந்தபோது பரமத்திவேலூரில் இருந்து மதுரைக்கு நூல்பண்டல்கள் ஏற்றிச்சென்ற லாரி பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பிரதீப் பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி, அழகர்சாமி ஆகியோர் வாகனங்களை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரதீப்பாண்டி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News