உள்ளூர் செய்திகள்
- வேடசந்தூர் அருகே மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருேக கருக்காம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார். ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள தனியார் மில்லில் கேசியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கினார். அவரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஜெயராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.