உள்ளூர் செய்திகள்
தேனி அருகே நோய்கொடுமையால் வாலிபர் தற்கொலை
- கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாலிபர் மனஉளைச்சலில் இருந்தார்.
- சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகில் உள்ள சாலிமரத்துப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துராஜ்(34).
இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துராஜ் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.