உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2022-07-01 05:34 GMT   |   Update On 2022-07-01 05:34 GMT
  • தேனி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
  • மேலும் தனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்தார்

தேனி:

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சசிக்குமார் (வயது31). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வில்லை என்றும், இன்னும் திருமணமாகவில்லை என்றும் தனது வீட்டில் புலம்பி வந்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த சசிக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News