உள்ளூர் செய்திகள்
தேனி அருகே நோய் கொடுமையால் வாலிபர் தற்கொலை
- இதய நோயால் அவதிப்பட்டு மனஉளைச்சலில் இருந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது41).
இவருக்கு இதய நோய் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மணிவாசகம் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.