உள்ளூர் செய்திகள்

கோவையில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2022-06-15 09:24 GMT   |   Update On 2022-06-15 09:24 GMT
  • கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது.

கோவை:

கோவை சூலூர் பீடம்பள்ளி சூரியநகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை

இந்த நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது. இதனால் அவருக்கு பல இடங்களில் வரன் பார்த்தும் பெண் அமையவில்லை என தெரிகிறது.

இதனை நினைத்து அவர் சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரை சேர்ந்தவர் சிட்ராஜன் குமார் (22). இவர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிதொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று வழக்கம் போல அவர் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்தில் இருந்து கல் கழன்று சிட்ராஜன் குமாரின் தலை மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News