உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-08-16 07:04 GMT   |   Update On 2022-08-16 07:04 GMT
  • 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள கோனூரை சேர்ந்த சென்ராயன் மகன் சசிக்குமார்(22).

இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News