உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே திருமணமான 40 நாளில் புதுப்பெண் தற்கொலை

Published On 2023-03-07 05:23 GMT   |   Update On 2023-03-07 05:23 GMT
  • புதுப்பெண்ணிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. திடீரென அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த வர் கண்ணன்பிரபு(44). ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அபிநயா(18). இவருக்கும் கேரளாவை சேர்ந்த கோபிகண்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது.

அதன்பிறகு அபிநயா விற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இத னால் புதுமண தம்பதிகளை தங்களது வீட்டிற்கு வர வழைத்தனர். அபிநயாவிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அபிநயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 40 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News