உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி

Published On 2022-07-10 15:07 IST   |   Update On 2022-07-10 15:07:00 IST
  • மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
  • நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அண்ணாநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாலமுருகன்(வயது 26).

மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News