உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் சாவு

Published On 2023-04-12 13:28 IST   |   Update On 2023-04-12 13:28:00 IST
  • காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே உள்ள அன்னஞ்சி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விஸ்வா (வயது 25). இவர் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த பிரியதர்ஷினி (22) என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் தேனி அன்னஞ்சி வீட்டில் வசித்து வந்தனர்.

பிரியதர்ஷினிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மாமியார் மீனாட்சி க.வி லக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

ஆனால் சிகிச்சையில் இருந்த பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News