உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே பட்டப்பகலில் இளம்பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்

Published On 2023-05-09 06:19 GMT   |   Update On 2023-05-09 06:19 GMT
  • கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன் செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.
  • கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கனகவள்ளியை தேடினார்.தேடியும் கிடைக்காததால்,போலீஸில் புகார் கொடுத்தார்,

விழுப்புரம்:

செஞ்சி அருகே சென்னாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன்செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.

இதனையடுத்து கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சுப்ரமணி கனகவள்ளியை தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கனகவள்ளி கிடைக்க வில்லை. இது குறித்து சுப்பிரமணி செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News