உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவ- மாணவிகளுக்கான சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றது.

என்.சி.சி. சான்றிதழுக்கான எழுத்து தேர்வு

Published On 2023-02-08 09:16 GMT   |   Update On 2023-02-08 09:16 GMT
  • நெல்லை சந்திப்பு ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவ- மாணவிகளுக்கான என்.சி.சி. ‘ஏ’ சான்றிதழுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
  • சுபேதார் கணேசன் மேற்பார்வையில் ம.தி.தா பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இந்த தேர்வு எழுதினர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவ- மாணவிகளுக்கான என்.சி.சி. 'ஏ' சான்றிதழுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. பள்ளிகள் அளவில் நடைபெற்ற இந்த தேர்வானது 9-வது சிக்னல் பட்டாலியன் சார்பில் நடத்தப்பட்டது.

கமெண்டன்ட் அதிகாரி சின்ஹா உத்தரவின் பேரில், சுபேதார் கணேசன் மேற்பார்வையில் ம.தி.தா பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இந்த தேர்வு எழுதினர். பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் மேற்பார்வையில், பள்ளியின் என்.சி.சி. அதிகாரி செல்லத்துரை தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News