உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும்- நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் வேண்டுகோள்

Published On 2022-08-14 08:54 GMT   |   Update On 2022-08-14 08:54 GMT
  • தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவதாக தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • அமுதபெருவிழா கொண்டாடப்பட்ட விவரங்களை மாவட்ட வாரியாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும் என தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.ஜெ.சரவணன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின அமுதப்பெருவிழா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

அதில் அனைத்து தொழிற்சாலைகளிலும் நிர்வாகத்தினர் கொடியேற்றுவது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவதாக தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேசிய கொடி வழங்க வேண்டும்

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதந்திர தின அமுதபெருவிழா கொண்டாடப்பட்ட விவரங்களை மாவட்ட வாரியாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News