உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட சுந்தரமூர்த்தி.

தொழிலாளி தற்கொலை - 2 பேர் கைது

Published On 2022-06-16 13:49 IST   |   Update On 2022-06-16 13:49:00 IST
கடனாக வாங்கிய ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி (36), கார்த்திகேயன் (35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூவரும் பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுதொடர்பாக அவரது மனைவி கமலி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தலைறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News