உள்ளூர் செய்திகள்
100 நாள் திட்ட வேலை பார்த்த தொழிலாளி நெஞ்சுவலியால் சாவு
- 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.
- திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவ ட்டம் வலங்கைமான் அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவ் ராசப்பன் (வயது 55) தொழிலாளி.
இவர் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த சக பணியாட்கள் 108 ஆம்புலனசை வரவ ழைத்தனர்.
பின்னர் மயங்கி விழுந்த ராசப்ப னை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.