உள்ளூர் செய்திகள்

லாரி மோதி உடல் நசுங்கி தொழிலாளி பலி

Published On 2023-01-19 15:54 IST   |   Update On 2023-01-19 15:54:00 IST
  • அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
  • இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கர்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). இவர் இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் சின்னார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News