உள்ளூர் செய்திகள்
கம்பத்தில் நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை
- நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் 25-வது வார்டு நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று மனமுடைந்த நிலையில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கணேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.