உள்ளூர் செய்திகள்
- தனது அறையில் லாரன்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்,
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி .இவரது மகன் லாரன்ஸ் (வயது42). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது அறையில் லாரன்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.