உள்ளூர் செய்திகள்

கருப்பூர் அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-04-09 07:36 GMT   |   Update On 2023-04-09 07:36 GMT
  • மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
  • இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:கருப்பூர் அருகே

தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

சேலம் கருப்பூர் அருகே உள்ள மஞ்சுளாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News