உள்ளூர் செய்திகள்

சேரம்பாடியில் தொழிலாளி கைது

Published On 2023-04-14 09:36 GMT   |   Update On 2023-04-14 09:36 GMT
  • செல்வகுமார் ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலக்கதில் ஊராட்சி செயலாளர் சஜீத் பணியில் இருந்துள்ளார். அப்போது சேரம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான செல்வகுமார் (வயது 50) அங்கு சென்று, ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News