உள்ளூர் செய்திகள்
போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
- சுமதி போலி மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ராமசந்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமதி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கல்வி அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமதி போலி மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிப்பு போலீசில் காவேரிப்பட்டணம் கல்வி அதிகாரி சபிக்சாப் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.