உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-30 14:15 IST   |   Update On 2023-07-30 14:15:00 IST
  • மணிப்பூரில் மத்திய அரசு அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
  • போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கோத்தகிரி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டும் நீலகிரி மாவட்ட பெண்கள் இணைப்புக்குழு சார்பில் கோத்தகிரி மார்கெட் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், மத்திய அரசு தலையிட்டு அங்கு அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவி ரோஸ்மேரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News