உள்ளூர் செய்திகள்

பழவூர் அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- வாலிபர் மீது வழக்கு

Published On 2023-03-22 09:07 GMT   |   Update On 2023-03-22 09:07 GMT
  • யுவராஜாவுக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
  • யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

வள்ளியூர்:

பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்த யுவராஜா (வயது 31) இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனையாக 30 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர்.

திருமணத்தின்போது பெண் வீட்டார் 16 பவுன் நகை போட்டதாகவும், மீதி நகையை வாங்கி வர சொல்லி யுவராஜா கொடுமைப்படுத்தியதாக வும், யுவராஜாவின் மனைவி வள்ளியூர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.அதன்படி வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News