உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-01-28 15:08 IST   |   Update On 2023-01-28 15:08:00 IST
  • பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீசை கைது செய்தனர்.
  • 110 லிட்டர் வெளிமாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீசாருக்கு அரசவனங்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த தோப்பு தெருவை சேர்ந்த கலைச்செல்வி (வயது 43) என்ற பெண்ணை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News