உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பெண் பலி

Published On 2023-05-24 15:19 IST   |   Update On 2023-05-24 15:19:00 IST
  • அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள இடையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் பையூர் என்கிற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News