உள்ளூர் செய்திகள்
பணத்தகராறில் பெண்ணை தாக்கிய விவசாயி கைது
- கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
- இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மேகலா (வயது50), இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 9 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.