உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சின்னமனூர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை

Published On 2023-10-21 06:17 GMT   |   Update On 2023-10-21 06:17 GMT
  • நகையை திருப்பி தராததால் கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
  • குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணன் மனைவி தேவி (வயது48). இவர்கள் சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்துள்ளனர். அந்த நகையை திருப்பி தராததால் கணவருடன் தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் நகை திருப்புவது குறித்து அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துக்கண்ணன் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேவியின் இறப்பு குறித்து தெரிய வரும். இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News