உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-12-21 08:53 GMT   |   Update On 2022-12-21 08:53 GMT
  • இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
  • சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே திருவாமூர் அப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வனிதா (வயது33). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனிதா தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்இவரை மீட்டு பண்ருட்டிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்குசிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்ட ர்கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News