உள்ளூர் செய்திகள்

எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

Published On 2023-03-31 15:37 IST   |   Update On 2023-03-31 15:37:00 IST
  • கடந்த சில நாட்களாக கவுசல்யா தீராத வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார்
  • 24-ந்தேதி மீண்டும் தீராத வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கானம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கவுசல்யா (வயது21). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுசல்யா தீராத வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 24-ந்தேதி மீண்டும் தீராத வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டுள்ளார்.

உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா இறந்தார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News