உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை

Published On 2022-11-10 09:05 GMT   |   Update On 2022-11-10 09:05 GMT
  • மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுமந்தை மீனவர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது . எனவே அவர் 2 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்கள் கூட இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். கடந்த 8-ந் தேதி சீனிவாச னின் மனைவி மணி மேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது.

எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு ரூ. 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமே கலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்ப ட்டுள்ளது. இதனால் மதி மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News