உள்ளூர் செய்திகள்
தங்க சங்கிலி திருடிய பெண் சிக்கினார்
- தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
- பெண்ணை மடக்கி பிடித்து சூளகிரி போலீசிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள குருபரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27).
இவர் தனது கைப்பையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஒரு தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் சவுந்தர்யா வைத்திருந்த பையில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து சவுந்தர்யா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை திருடிய பெண்ணை மடக்கி பிடித்து சூளகிரி போலீசிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட பெண் சேலம் அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா (23) என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.