உள்ளூர் செய்திகள்

வாங்கிய கடனை கட்ட ஊழியர்கள் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி

Published On 2022-07-11 08:56 GMT   |   Update On 2022-07-11 08:56 GMT
  • கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
  • பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News